logo
அறந்தாங்கியில் காவல்துறை வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு முகாம்

அறந்தாங்கியில் காவல்துறை வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு முகாம்

09/Oct/2020 10:48:39

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வர்த்தக சங்கத் தலைவர் வரதராஜன் அறந்தை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையொட்டி, அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்த   பயணிகளுக்கு முககவசம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து  பேருந்த நிலையத்திலுள்ள  காவல் உதவி மையம் அருகில் வைக்கப்பட்டிருந்த ஆவி பிடிக்கும் எந்திரத்தின் மூலம் பயணிகளை ஆவி பிடிக்க வைத்து  கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

 இதில், அறந்தாங்கி காவல்நிலைய ஆய்வாளர் ரவீந்திரன், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் சிவகுமார்,வர்த்தக சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், சலீம், காந்திநாதன், செல்வம் சமூக ஆர்வலர்கள் பஷீர்அலி, பகதூர்ஷா, முகமது முபாரக், பிச்சை முகம்மது உள்ளிட்டோர்  கொண்டனர். 


Top