logo
பொன்னமராவதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு முகாம்

09/Oct/2020 10:35:24

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில்  இன்று(அக்.9) நடைபெற்ற  கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை வகித்து பேருந்து நிலையத்தில் மருத்துவ முகாமினையும் தொடங்கி வைத்து, பேருந்துகளில் இருந்த பயணிகளுக்கு முகக்கவசங்களையும், துண்டறிக்கைகளையும் வழங்கினார்.

இதையொட்டி, எமதர்மன் வேடமணிந்த ஒருவர் முகக்கவசத்தின் அத்தியாவசியத்தை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கினார். முன்னதாக பொன்னமராவதி காவல் நிலையத்தில் வர்த்தக சங்கத்தினரை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் கடைகள் தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதற்கு நன்றி தெரிவித்ததுடன், அனைவருக்கும் காவல்துறை முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளித்தார். இதில், காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன்,காவல் ஆய்வாளர் கருணாகரன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி, வட்டாட்சியர் திருநாவுக்கரசு, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Top