logo
நடிகர் சூரியிடம் ரூ. 2.70 கோடி மோசடி செய்தாக தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு

நடிகர் சூரியிடம் ரூ. 2.70 கோடி மோசடி செய்தாக தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு

09/Oct/2020 01:52:40

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி நடிகர் சூரியை மோசடி செய்ததாகத் திரைப்படத் தயாரிப்பாளர் உள்பட இருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலம் வாங்கித் தருவதாக 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வீர தீர சூரன் படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ள தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நிலம் வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாக தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்  நடிகர் சூரி. 

ஆனால் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நில மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் மீது சென்னை அடையார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 


Top