08/Oct/2020 05:01:52
புதுக்கோட்டை காவல்துறையினருக்கு பேரிடர் மீட்புப் பணி சார்பில் மழை வெள்ள காலங்களில் பொது மக்களை மீட்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது
தமிழக அரசு உத்தரவின்படி, கூடுதல் காவல் துறை இயக்குனர் செயலாக்கம் விசுவநாதன் ஆணையின்படி ஆண்டு தோறும் கடலோர மாவட்டங்களுக்கு 5 நாட்கள் மற்றும் கடலோர அல்லாத மாவட்டங்களுக்கு மூன்று நாட்கள் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்படும்.
அதேபோல், நடப்பாண்டும், புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் பேரிடர் மேலாண்மை பயிற்சி இன்று நடைபெற்றது.
அதேபோல், 5 பேர் ரப்பர் படகில் செல்வது நடுப்பகுதியிலிருந்து தண்ணீருக்குள் குதித்து நீந்தி வருவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சியும், விபத்து காலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் அங்கு இருக்கும் பொருட்களை கொண்டே பொது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 61 காவலர்கள் பயிற்சி பெற்றனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நகர காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பயிற்றுனர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.