logo
அதிகாலையில் பெய்த மழையால் குளிர்ந்த புதுக்கோடடை

அதிகாலையில் பெய்த மழையால் குளிர்ந்த புதுக்கோடடை

08/Oct/2020 10:06:06

புதுக்கோட்டையில் 8.10.2020 இன்று அதிகாலை 4 மணிக்கு இடியுடன் கூடிய பெய்ததால் கடந்த  நாட்களாக வெப்பத்துடன் காணப்பட்ட  புதுக்கோட்டை நகரமும் மாவட்டத்தின் சில பகுதிகளும் குளிர்ச்சியான சூழ்நிலைக்கு திரும்பின.

கடந்த சில நாட்களால் புதுக்கோட்டை நகரில் அக்னி நட்சத்திரம் போல வெயில் அடித்தது. இதில் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் இரு  நாட்களாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டதால் சிரமம் மேலும் அதிகரித்தது.

இச்சூழ்நிலையில்,  இன்று அதிகாலை 4 மணியளவில் இடி மின்னல் காற்றுடன் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று வீசியதால் புதுக்கோட்டை புதுக்குளம் பகுதியில் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது.     மாவட்டம் முழுவதும் சில இடங்களில் மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும்  மகிழ்ச்சியடைந்தனர் 

Top