logo
நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை-பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை-பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

08/Oct/2020 12:08:53

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி  கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில், நேற்று நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,646 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 750 கன அடியும், கீழ்பவானி பாசனத்திற்காக 2,300 கன அடியும் என மொத்தம் 3,050 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 


Top