logo
கறம்பக்குடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

கறம்பக்குடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 15 பேர் காயம்

02/Jul/2022 08:57:28

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர்.

 கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடிக்கு தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பேருந்தை தஞ்சை மாவட்டம், கொல்லைக்காட்டைச் சேர்ந்த செ.சரவணக்குமார் ஓட்டிச்சென்றுள்ளார். பேருந்து அக்னி ஆற்று பெரியபாளம் அருகே சென்றபோது,எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதாமல் இருக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலைத்தொடர்ந்து, அங்கு சென்ற கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள், போலீஸார் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதில், பேருந்து ஓட்டுநர் சரவணக்குமார், சூரக்காட்டைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஹரிகரன், ஆலங்குடி எழில்நகரைச் சேர்ந்த செல்வம் மனைவி கவிதா,அதே பகுதியைச் சேர்ந்த முத்தையா மனைவி அஞ்சலிதேவி, சூரக்காட்டைச் சேர்ந்த பச்சைமுத்து மனைவி காளியம்மாள்,கடுக்காகாடு பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் கருப்பையா, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி வீரம்மாள்,  இடையாத்தியைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் முத்துராசு, முத்துராசு மனைவி ராணி,நம்பன்பட்டியைச் சேர்ந்த கணேசன் மனைவி சந்திரா, ஆண்டிக்குளப்பன்பட்டி கோவிந்தன் மனைவி சின்னப்பொண்ணு, கெண்டையன்தெருவைச் சேர்ந்த  ஆறுமுகம் மனைவி நாகம்மாள், கருப்பக்கோன்தெருவைச் சேர்ந்த செல்லையா மனைவி பாக்கியம், வானக்கன்காட்டைச் சேர்ந்த திருமணஞ்சேரி மனைவி விஜயலெட்சுமி, கொள்ளம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி மகன் பன்னீர்செல்வம் ஆகிய 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அவசர ஊர்தி மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 இதுகுறித்து கறம்பக்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Top