05/Oct/2020 06:29:58
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில் மாநில குழு மானியம் 2019- 2020 திட்டத்தின் கீழ் 8 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் நிலையம் கட்டப்பட்டது.
இதனையடுத்து மேலப்பனையூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தானியங்கி இயந்திரத்தில் பொதுமக்கள் இரண்டு ரூபாய் செலுத்தி பட்டனை அழுத்தினால் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை திருமயம் ஒன்றியக்குழுத்தலைவர் அழ. ராமு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன், ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 2 ரூபாய்க்கு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
. முன்பாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், சாலையோரங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.