30/Aug/2021 01:00:17
புதுக்கோட்டை, ஆக: கோகுலாஷ்டமியை முன்னிட்டு புதுக்கோட்டையில் சாந்தநாத சுவாமி சந்நிதி தெருவில் உள்ள ஜி.டி.என். பூஜை பொருட்கள் விற்பனையகத்தில் கலையம்சம் கொண்ட கிருஷ்ணன் ராதை பொம்மைகளை ஏராளனமான பக்தர்கள் வாங்கிச் சென்றனனர்
கோகுலாஷ்டமி விசேஷம்: ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த தொகுப்பில் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய சில ஸ்வாரஸ்ய தகவல்களை தெரிரிந்துக் கொள்ளலாம் வாங்க...
மகாவிஷ்ணு எடுத்த 9-ஆவது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்த