logo
தறிப்பட்டறை தொழிலாளியின் மோட்டார் பைக் தீ வைத்து எரிப்பு: போலீசார் விசாரணை

தறிப்பட்டறை தொழிலாளியின் மோட்டார் பைக் தீ வைத்து எரிப்பு: போலீசார் விசாரணை

27/Aug/2021 08:50:32

ஈரோடு, ஆக: வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தறிப்பட்டறை தொழிலாளியின் மோட்டார் பைக் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக  போலீசார் விசாரிக்கின்றனர். 

ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரியகுட்டை வீதியை சேர்ந்தவர் காளியப்பன்(35). தறிப்பட்டறை தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மோட்டார் பைக் ஒன்றை வாங்கினார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். இந்நிலையில்,

நேற்று இரவு  வழக்கம்போல் வேலையை முடிந்து வீட்டிற்கு வந்த காளியப்பன் தனது மோட்டார் பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.  இந்நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம கும்பல், காளியப்பன் மோட்டார் பைக்கை  தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடிவிட்டது. இன்று காலை மோட்டார் சைக்கிள் எரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காளியப்பன், வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சிலர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Top