logo
ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ.விசாரணை

ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ.விசாரணை

27/Aug/2021 01:12:09

ஈரோடு, ஆக: ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் திருமணமான இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக  ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

 ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்தவர் கவுதம். அவரது மனைவி ஆஷா (வயது 27).இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கவுதம் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆஷாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஆஷா மகனுக்கு மொட்டை போடுவது சம்பந்தமாக கணவரிடம் பேசி உள்ளார். பின்னர் கவுதம் வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை  கவுதம் தட்டினார் .ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை. கதவு உள்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கவுதம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஆஷா தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு இருந்தவர்கள் உதவியுடன் ஆஷாவை மீட்டு சிகிச்சைக்காக  ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே  ஆஷா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி இரண்டு வருடமே ஆவதால்  இது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ பிரேமலதாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Top