logo
தலைமறைவாக இருக்கும் 2 வங்க தேசத்தினரை பிடிக்க தனிப்படையினர் பனியன் கம்பெனிகளில் தீவிர சோதனை

தலைமறைவாக இருக்கும் 2 வங்க தேசத்தினரை பிடிக்க தனிப்படையினர் பனியன் கம்பெனிகளில் தீவிர சோதனை

25/Aug/2021 06:10:08

ஈரோடு, ஆக:  ஈரோடு மாவட்டம், பெருந்துறை பணிக்கம்பாளையம் கேஸ் குடோன் அருகில் ஒரு வீட்டில்  உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வெளிநாட்டினர்  கைது செய்யப்பட்டநிலையில், அவர்களுடன் தங்கியிருந்த மேலும்  2 பேர் தலைமறைவாகினர். இவர்களை தனிப்படை போலீஸார்  பனியன் கம்பெனிகளில் தேடி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் வங்கதேசம் நாட்டில் இருந்து இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்து ரெயில் மூலம் ஈரோடுக்கு வந்து அங்கிருந்து பெருந்துறையில் தங்கியிருந்தது தெரியவந்தது.  மேலும் ,இவர்கள் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜஹங்கர்,ஆதாஸ் ஆகியோரும் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பெருந்துறை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜஹங்கர்,ஆதாஸ் அவரை பிடிக்க பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

தனிப்படையினர் திருப்பூர்-ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டுவரும் பனியன் கம்பெனிகளில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதேபோல் கட்டிடங்கள் வேலை நடைபெறும் இடங்களிலும் சென்று சோதனை செய்து வருகின்றனர்.

இருவரும் வேறு எங்கு தப்பிச் செல்லாத வகையில் இருவர் புகைப்படங்களும் அனைத்து காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் இருவர் பிடிபட்டால் தான் பெருந்துறையில் இவர்கள் எதற்காக தங்கியிருந்தார்கள் என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Top