24/Aug/2021 05:49:46
புதுக்கோட்டை,ஆக: புதுக்கோட்டை மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக ஆசிரியர்களுக்கு நடைபெறும் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியினை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளியில் இரண்டாம் கட்டமாக ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 23 திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் நடைபெறும் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பார்வையிட்டு பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களின் வருகையினை ஆய்வு செய்து பயிற்சியினை சிறப்பாக பெற வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, புத்தாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சியினை தொடங்கி வைத்து அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வில் தலைமையாசிரியர்கள், கருத்தாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.