logo
சென்னை மக்களிடம் கொரோனா பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை: அஸ்வின் வேதனை

சென்னை மக்களிடம் கொரோனா பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை: அஸ்வின் வேதனை

18/Mar/2020 02:32:51

கொரோனா வைரஸ் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை சென்னை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என இந்திய சுழல்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,500 பேர் வரை பலியாகி உள்ளனர். 1.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், உள்ளன. பணம் கொழிக்கும் விளையாட்டான .பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை  சென்னை மக்கள் தவிர்க்கிறார்கள் என்றும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு கூறப்பட்டதை சென்னை மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.மேலும் சென்னையில் நிலவும் கடுமையான வெப்ப நிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என்று மக்கள் நினைத்து இருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என நம்பிக்கை கொண்டு இருக்கலாம். என்று  சென்னை மக்கள் மீதான தனது அதிருப்தியை அவர் தெரிவித்துள்ளார்.

Top