logo
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில்;ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய  மேம்பாட்டுப் பணிகள்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில்;ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு

19/Aug/2021 11:01:40

புதுக்கோட்டை, ஆக:   புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில்; ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து மா.மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நடந்த ஆய்வில்,புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில்; பிரதான கட்டிடத்;தில் உள்ள மணிமண்டபத்திற்கு செல்வதற்கான மரப்படிக்கட்டுகள் மற்றும் பிரதான கட்டிடத்தின் மேம்பாட்டுப் பணிகள் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  தெரிவித்தார். 

இதில், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மா.மன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம், செயற்பொறியாளர் செந்தில், வட்டாட்சியர் எஸ்.செந்தில்குமார், மா.மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாக்க குழுத்தலைவர் ஆர்.சம்பத்குமார்,  மூத்த வழக்குரைஞர் ஏ.சந்திரசேகரன், உதவிப் பொறியாளர் அழகுசுந்தரம், பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். 


Top