19/Aug/2021 10:43:45
புதுக்கோட்டை, ஆக: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரச் செயலாளராக பணியாற்றி அகால மரணமடைந்தஸ்.பாபுவின் நினைவாக கொடிக்கம்பம், கல்வெட்டு நிறுவப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை நகரச் செயலாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினராகவும் பணியாற்றிவர் தோழர் எஸ்.பாபு. இவர் அண்மையில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சின்னப்பா பூங்கா அருகில் பாபுவின் நினைவாக கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு நிறுவப்பட்டது.
கொடியேற்று நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் நகரத் தலைவர் ஏ.டேவிட் தலைமை வகித்தார். கொடிக்கம்பத்தை மாநில துணைச்செயலாளர் சி.சந்திரபோஸ் ஏற்றிவைத்தார். கல்வெட்டை மாநில செயற்குழு உறுப்பினர் பி.லெனின் திறந்து வைத்தார்.
மாவட்டச் செயலாளர் துரை.நாராயாணன், தலைவர் ஆர்;.கர்ணா, துணைச் செயலாளர் பி.அருண், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், வாலிபர் சங்க நகரக்குழு உறுப்பினர்கள் வினோத், சேக்முகமது, சங்கர், சதீஸ், ராமு, சீனி, ஜாகீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்