logo
பவானிசாகர் அணையிலிருந்து  தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்

19/Aug/2021 12:01:49

ஈரோடு, ஆக:பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 21 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியில் இருந்து வருகிறது.இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில்  பரவலாக மழை பெய்ததால்  பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்வரத்து வந்தது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

 நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 100.88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,124  கன வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.  பவானி ஆற்றுக்கு 100 கன அடியும்,  பாசனத்திற்காக  கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆயிரம் கன அடியும என மொத்தம் ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Top