logo
திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு திருச்சிசரக ஐஜி பாராட்டு

திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு திருச்சிசரக ஐஜி பாராட்டு

18/Aug/2021 10:12:21

புதுக்கோட்டை, ஆக: திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் காவல் உதவி ஆய்வாளர் வீரமணி  மற்றும் முதல் நிலைக்காவலர்கள் 1205 -வினோத்,  1511 -கணேசன், ஆயுதப்படை காவலர்கள்நெப்போலியன், ரபேல்தாஸ் மற்றும் சரவணகுமார் ஆகியோரை உள்ளடக்கிய  தனிப்படையினர், கரூர் மாவட்டம், தோகைமலை காவல் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த 11.08.2021 அன்று வாகனச் சோதனை நடத்தி  மணல் கடத்தலில் ஈடுபட்ட  2 ஜே.சி.பி. வாகனங்கள் மற்றும் 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.  

அதே போன்று, குன்னம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன், பெரம்பலுர் மாவட்டம் மற்றும்  தகா 1464- மாரிமுத்து, முதல் நிலைக்காவலர் 662- கார்த்திகேயன், காவலர் 268-மணிகண்டன் மற்றும் முதல் நிலைக்காவலர் 1355- தினேஷ்குமார் ஆகியோரை உள்ளடக்கிய தனிப்படையினர், கரூர் மாவட்டம் ,வாங்கல் காவல் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த 11.08.2021 அன்று வாகனச் சோதனை நடத்தி  மணல் கடத்தலில் ஈடுபட்ட  2 ஜே.சி.பி. வாகனங்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை கைப்பற்றி சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரின் செயலை பாராட்டும் வகையில்,  மத்திய மண்டல காவல்துறை தலைவர்  பாலகிருஷ்ணன் காவலர்களை  நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 

சிறப்பாக பணியாற்றி காவல்துறை தலைவரிடம் பாராட்டு மற்றும் வெகுமதியை பெற்ற திருமயம் காவல் நிலையை காவல் உதவி ஆய்வாளர் வீரமணி, ஏற்கெனவே  பொன்னமராவதி, காரையூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதியில் சிறப்பாக பணியாற்,றி காவல்துறை உங்கள் நண்பன் என்ற வரிகளுக்கேற்ப பொது மக்களின் பாராட்டை பெற்றவர் என்பது  குறிப்பிடத்தக்கது. 


Top