logo
புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு பெயர் சூட்டிய மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு பெயர் சூட்டிய மாவட்ட ஆட்சியர்

10/Aug/2021 11:15:13

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி  அருகே கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு பெயர் சூட்டி குழந்தைகள் நலக்குழுவிடம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கறம்பக்குடி வட்டம், பிலாவிடுதி பேருந்து நிறுத்தத்தில் கண்டெடுக்கப்பட்ட சிகிச்சை பெண் குழந்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டுலைன் ஆகியோர் மூலம் மீட்க்கப்பட்டு, அரசு இராணியார் மகப்பேறு மருத்துமனையில் 19 நாட்கள் அளித்தபின், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, முன்னிலையில் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இக் குழந்தைக்கு  யாழினி என மாவட்ட ஆட்சியர் பெயர் சூட்டினார். 

இந்நிகழ்வில் ,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜா. குணசீலி, குழந்தைகள் நலக்குழுதலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி மற்றும் உறுப்பினர்கள், நன்னடத்தை அலுவலர் பிரேம்நாத், சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top