logo
பெருந்துறை அருகே  தீ விபத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பெருந்துறை எம்.எல்.ஏ நிதியுதவி

பெருந்துறை அருகே தீ விபத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பெருந்துறை எம்.எல்.ஏ நிதியுதவி

08/Aug/2021 11:43:19

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பேரூராட்சிக்குட்பட்ட 13-ஆவது வார்டு, பெரிய வேட்டுப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாகாளி தேவி குடும்பத்தினருடைய வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்து சேதமானது. தீயணைப்பு வாகனம் நேரில் வரவழைக்கப்பட்டு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மாகாளி தேவி குடும்பத்திற்கு, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்  நேரில் வந்து 10,000 நிதி உதவி வழங்கினார். அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், செய்து தருவதாக உறுதியளித்து ஆறுதல் கூறினார். 

உடன், பெருந்துறை பேரூர் கழக செயலாளர் கல்யாணசுந்தரம், ஒன்றிய சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை ஒன்றிய கழக செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை பேரூராட்சி வார்டு செயலாளர் அருணாச்சலம், மக்கள் முருகேஷ், பழனிச்சாமி, விஸ்வநாதன், சென்னியப்பன், குணசேகரன், தமிழரசு, கேபிஎஸ் மணி ஹிட்டாச்சி பாலு ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Top