logo
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி: எம்எல்ஏ- எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி: எம்எல்ஏ- எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

08/Aug/2021 11:38:08

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் குள்ளம்பாளையம் ஊராட்சி, எம்ஜிஆர் நகர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜூனன் தலைமையில், பெருந்துறை ஒன்றிய சேர்மன் சாந்தி ஜெயராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்  துவக்கி வைத்தார் 

 எம்ஜிஆர் நகர் பகுதி 1-ஆவது வார்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி 6.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள்ளது. 

இதில்,  துணைச் சேர்மன் உமாமகேஸ்வரன், ஒன்றிய கழக அவைத் தலைவர் சந்திரசேகரன், வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், ஒன்றிய கழகச் செயலாளருமான விஜயன் என்கிற ராமசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ்.

வார்டு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, கெஜலட்சுமி, செல்வராஜ்,  கே பி எஸ் மணி, ஹிட்டாச்சி பாலு, கருப்பட்டி சங்க துணை தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியம், வரதராஜன், தேவேந்திரன், அண்ணாதுரை, பத்மநாபன், சதீஷ், இளங்கோ மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Top