logo
கலைஞர் நினைவுநாளையொட்டி ஈரோட்டில் அவரது உருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கலைஞர் நினைவுநாளையொட்டி ஈரோட்டில் அவரது உருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

07/Aug/2021 01:27:59

ஈரோடு, ஆக: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாளையொட்டி திமுக சார்பில், இன்று ஈரோட்டில் கலைஞரின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.  ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில்  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் கந்தசாமி தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் உருவச்சிலைக்கு துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் குமார்முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் சின்னனையன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, மைவிழி முருகேசன், பகுதி செயலாளர் அக்னி சந்துரு,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதே போல நகரின் பல்வேறு  வீதிகளில்  ஆங்காங்கே கலைஞர் உருவப்படத்தை  வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

Top