logo
ஈரோட்டில் 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட உலக சாதனை மருத்துவமனை கட்டிடம் பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

ஈரோட்டில் 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட உலக சாதனை மருத்துவமனை கட்டிடம் பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

07/Aug/2021 12:40:54

ஈரோடு ஆக: ஈரோட்டில் 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட உலக சாதனை மருத்துவமனை கட்டிடம் பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம்  முறைப்படி வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில்  கொரானா தாக்கம் அதிகரித்து  வந்த நிலையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அதிகளவில் நோயாளிகள் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ,ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கம்  மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் 14.5 கோடி ரூபாய் மதிப்பில்  69 ஆயிரம் 200 சதுரடியில் மூன்று தளங்களுடன் 401 படுக்கைகள் கொண்ட கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் 45 நாட்களுக்குள் மருத்துவமனை முடிக்கப்பட்டது.

இதற்காக உலக அளவில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஆசிய கண்ட அளவிலே ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டு, இந்திய அளவில் இந்தியன் ரெக்கார்டு அகடமி மற்றும் தமிழக அளவில் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.

இந்த மருத்துவமனையை நோயாளிகள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை கட்டிடத்தை ரோட்டரி சங்கத்தின் இண்டர்நேஷனல் தலைவர் ஷிகர் தேத்தா  அரசு ஈரோடு மருத்துவகல்லூரி டீன் மணியிடம் நேற்று ஒப்படைத்தனர்.இந்த மருத்துவமனை வளாகத்தில் 401 படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி ஹெல்த் கேர் டிரஸ்ட் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Top