06/Aug/2021 11:25:53
புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் திலகர்திடலில் உள்ள மணிமேகலை மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சங்கத்தலைவர் பி.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பட்டய தலைவர் ஜெ . கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் சாரதாமணி கலந்து கொண்டு, தாய்மார்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் சத்துணவு பொருட்கள் வழங்கி, தாய்ப்பால் முக்கியத்துவத்தைபற்றி விளக்கிப் பேசினார்.
சங்க நிர்வாகிகள் சந்தைக்குமார்,அரவிந்த், பொருளாளர் அன்புசண்முகம் , மருத்துவர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர். லயன்ஸ் திருநாவுக்கரசு வரவேற்றார். செயலாளர் எஸ் பக்தவச்சலம் நன்றி கூறினார்