logo
பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்:   சிபிஎம் ராமக்கிருஷ்ணன் வலியுறுத்தல்

பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: சிபிஎம் ராமக்கிருஷ்ணன் வலியுறுத்தல்

05/Aug/2021 12:20:57

ஈரோடு, ஆக: பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என  சிபிஎம் ராமக்கிருஷ்ணன் வலியுறுத்தினார்.

ஈரோட்டில் சிஐடியு அலுவலகத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டத்துக்கு  மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில செயலாளர் பத்ரி, மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை கேட்பதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு வராத காரணத்தால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற மாண்புகளை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார்.

அது உண்மையல்ல. எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட, முக்கிய பிரச்சனையான பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கனும். அந்த கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு எங்களது கருத்துகளை கேட்டு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகுமா?. 

நாடாளுமன்ற கூட்டம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுவதற்கு, பிரதமா், உள்துறை அமைச்சரின் தவறான அணுகுமுறை தான் காரணம். இந்தியாவில் 300பேரின் ஸ்மார்ட் போன்களை வேவு பார்ப்பதாக பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை இந்திய அரசு ஒப்புக்கொள்ள மறுத்து, நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.

இது மனித உரிமைக்கு எதிரானது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஜனநாயகத்திற்கும், நாட்டின் சுதந்திரத்திற்கும் எதிரானது. பெகாசஸ் பிரச்சனையில் எதிர்கட்சி உறுப்பினர்கள், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில், தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை நாடாளுமன்றத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் கலந்து கொண்டு காதுகொடுத்து கேட்டு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். இதனையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் தற்போதைய சூழலை மோடி அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு மசோதாக்களை சட்டம் ஆக்குகின்றனர். காப்பீட்டு திட்டம் தொடர்பாக ஒரு சட்டம் பாஸ் ஆகி விட்டது. 4 பொது காப்பீட்டு நிறுவனத்தில் ஒன்றை தனியாருக்கு விற்பனை செய்வதாக முடிவு செய்து  சட்டத்தை அமல்படுத்தி விட்டனர்.

ஏற்ஈரோடு, ஆக: பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என  சிபிஎம் ராமக்கிருஷ்ணன் வலியுறுத்தினார்.


 ஈரோட்டில் சிஐடியு அலுவலகத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டத்துக்கு  மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில செயலாளர் பத்ரி, மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை கேட்பதற்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு வராத காரணத்தால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்ற மாண்புகளை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார். அது உண்மையல்ல. எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட, முக்கிய பிரச்சனையான பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கனும். அந்த கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு எங்களது கருத்துகளை கேட்டு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைப்பது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகுமா?. 

நாடாளுமன்ற கூட்டம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுவதற்கு, பிரதமா், உள்துறை அமைச்சரின் தவறான அணுகுமுறை தான் காரணம். இந்தியாவில் 300பேரின் ஸ்மார்ட் போன்களை வேவு பார்ப்பதாக பட்டியல் வெளியாகி உள்ளது. இதனை இந்திய அரசு ஒப்புக்கொள்ள மறுத்து, நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது. இது மனித உரிமைக்கு எதிரானது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஜனநாயகத்திற்கும், நாட்டின் சுதந்திரத்திற்கும் எதிரானது. பெகாசஸ் பிரச்சனையில் எதிர்கட்சி உறுப்பினர்கள், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில், தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை நாடாளுமன்றத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் கலந்து கொண்டு காதுகொடுத்து கேட்டு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். இதனையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் தற்போதைய சூழலை மோடி அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு மசோதாக்களை சட்டம் ஆக்குகின்றனர். காப்பீட்டு திட்டம் தொடர்பாக ஒரு சட்டம் பாஸ் ஆகி விட்டது. 4 பொது காப்பீட்டு நிறுவனத்தில் ஒன்றை தனியாருக்கு விற்பனை செய்வதாக முடிவு செய்து  சட்டத்தை அமல்படுத்தி விட்டனர்.

ஏற்கெனவே தனியார் காப்பீட்டு நிறுவனம் மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்று தான் பொதுத்துறை நிறுவனமாக ஆக்கினார்கள். தற்போது, மீண்டும் பொதுத்துறையை தனியார் துறையாக மாற்ற நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதேபோல மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், பகிர்மானம் தனியார் மயமாக்குவதையும் மத்திய அரசு இந்த நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற துடித்து வருகின்றனர்.

நாட்டில் மத்தியில் மோடி தலைமையிலான பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார வளர்ச்சி குன்றி வறுமை கோட்டிற்கு வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஆய்வின் அடிப்படையில் 2019-2020 ம் ஆண்டின் படி ஒட்டுமொத்தமாக வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 30கோடியாக அதிகரித்துள்ளது.

தற்போது 2020-2021 ம் ஆண்டில் பொருளாதார ஜிடிபி 7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இது மேலும் வேலையில்லா திண்டாத்தை அதிகரிக்க செய்யும், வறுமை கோட்டிற்கு கீழ் தள்ள செய்யும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பொருளாதார திட்டத்தை மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மோடி அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் ஏழை, எளிய மக்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் பணம் கட்டி படித்து வந்தனா். தற்போது கொரோனா சூழ்நிலையால் வருமானம் குறைந்து அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இந்த சூழலை பயன்படுத்தி அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்தி, கட்டமைப்புகளை உயர்த்தி, ஆசிரியர்களின் பணி கலாச்சாரத்தையும் மேம்படுத்த அரசு முன்வர வேண்டும். 

கொரோனா வைரஸ் இந்திய மக்களின் வாழ்க்கையை புறட்டி போட்டுள்ளது. பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. வருமானம் இழந்து, வாழ்வாதாரம் இழந்திருக்க கூடிய இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்த விலை உயர்வினால் உணவு பொருட்கள் விலையெற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார் அவர். 


Top