logo
தீரன்சின்னமலையின் நினைவு நாள்: பாஜக சார்பில் மாநிலத்தலைவர் மரியாதை

தீரன்சின்னமலையின் நினைவு நாள்: பாஜக சார்பில் மாநிலத்தலைவர் மரியாதை

04/Aug/2021 11:50:33

ஈரோடு, ஆக:இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216 -ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம், அரச்சலூர்  ஓடாநிலையில் உள்ள  அரவது உருவ சிலைக்கு தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை  செய்தார்.

.பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை  கூறியதாவது:  1967 -க்கும் பின்னர் வந்த தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர் குறித்த வரலாறு  இல்லை. நிறைய வரலாறு புறக்கணிப்பட்டுள்ளன.  கீழடி ஆய்வை வரவேற்கிறோம்.  கீழடி தனி ஒருவருக்கு சொந்தமில்லை. நீட் தேர்வை பொறுத்தவரை சமூகநீதியை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. நீட் யாருக்கும்  எதிரானது அல்ல. சுகாதாரத்துறை அமைச்சர்   மா.சுப்பிரமணியம், நீட் தேர்வு எழுதி முதலில் தேர்ச்சி பெறட்டும். 

பா.ஜ.க உண்ணாவிரதம் கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் எதிரானது.தமிழக விவசாயிகளுக்காக  பொதுமக்களுக்காக தான் உண்ணாவிரதம் என்றார்.தமிழக மக்களையும் , தமிழணர்வையும் பிரதமர் மோடி மதித்து வருவதாகவும் , தமிழக பா.ஜ.க ஒவ்வொரு  வீடு வீடாக சென்று மோடி செய்த திட்டங்கள் குறித்து விளக்கப்படும் என்றார். தேர்தல் அறிக்கையில் சொன்னதை முதலில் திமுக செய்யட்டும் என்றார் அண்ணாமலை .

Top