logo
ஈரோட்டில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

03/Aug/2021 12:49:18

ஈரோடு, ஆக: ஈரோட்டில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்  பொதுமக்களிடையே அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது

ஈரோடு கருங்கல்பாளையம் வி.ஜி.பி. நகரை சேர்ந்தவர் மதி (எ) மதிவாணன், 45. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தீபா பேரவை மாவட்ட இணை செயலாளராக  இருந்து கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க. இணைந்தார்.

இவர் கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரில் அம்மா பொது இ–சேவை மையம் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில்,  தனது இ–சேவை மையத்தில் மதிவாணன் அமர்ந்திருந்தபோது, இ–சேவை மையத்துக்குள் வந்த  மூன்று மர்ம நபர்கள்  மதிவாணனை, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால்  வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பிச்சென்றனர்.

தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்க்கு வந்த ஈரோடு நகர காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,  கடந்த சில ஆண்டுக்கு முன் பிரபல ரவுடி பிரகலாதன் என்பவரை கொலை செய்த வழக்கு மதிவாணன் மீது நிலுவையில் இருப்பதால் இறந்த பிரகலாதனின் நண்பர்கள்  பழிவாங்கும்  வகையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவவ்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Top