logo
ஹாத்ரஸ் விவகாரம்: உண்மையை உ.பி. அரசு மறைபதாக  திமுக எம்.பி. கனிமொழி  குற்றச்சாட்டு

ஹாத்ரஸ் விவகாரம்: உண்மையை உ.பி. அரசு மறைபதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

04/Oct/2020 06:36:49


ஹாத்ரஸ் வன்கொடுமை விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசு உண்மையை மறைப்பதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர், எஸ்.சி., மற்றும் எஸ்.டி.  பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகியுள்ளது என்றும் கூறினார்.

இது குறித்து. திமுக எம்.பி. கனிமொழி மேலும் கூறுகையில்,  உத்தரப்பிரதேசத்தில் என்ன நடந்தது என்பதை பா.ஜ.க. மறைக்கிறது. பத்திரிகைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், தாக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் செல்லும் அரசியல் தலைவர்களும் தாக்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.ஹாத்ரஸ் வன்கொடுமையை கண்டித்து திமுக மகளிரணி சார்பில், ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி நடைபெறவுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

Top