04/Oct/2020 05:35:48
புதுக்கோட்டை செஞ்சூரி லயன்ஸ் சங்கம் மற்றும் புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று(அக்.4) நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு செஞ்சூரி லயன்ஸ் சங்க நிறுவனர் கண்ணன் கபசுர குடிநீரரை வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.சைக்கிள் பேரணி திலகர்திடலில் தொடங்கி மச்சுவாடி வழியாக வடவாளம் கிராமத்தைக் கடந்து செட்டியாப்பட்டியில் நிறைவடைந்தது.
செட்டியாப்பட்டியில் நடைபெற்ற நிகழ்வில், புத்தாஸ் வீரக்கலைகள் கழகத்தலைவர் சேதுகார்த்திகேயன் கலந்து கொண்டு கிராம பொது மக்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீரை விநியோகித்து, கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். இதில்,செஞ்சூரி லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் குமார். செயலர் அரவிந்த், நிர்வாகிகள் நடேசன், அன்புசண்முகம், புத்தாஸ் வீரக்கலைகள் கழக பெற்றோர் சங்க நிர்வாகிகள் அஸ்வின்குமார்,சுரேஷ்,தியாகராஜன்,செட்டியாப்பட்டி சங்கர், வாகை சேகர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்துகொண்டனர்.