logo
ஜூலை 30-இல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூம் செயலி வழியாக நடைபெற உள்ளது.

ஜூலை 30-இல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூம் செயலி வழியாக நடைபெற உள்ளது.

28/Jul/2021 05:04:21

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்ட   விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) கூகுள்- ஜூம் செயலி வாயிலாக நடைபெற உள்ளது. 

இதுகுறித்து, மாவட்டஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:       புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  வரும் ( 30.07.2021) வெள்ளிக்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் காணொளிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்    தலைமையில் Zoom App/Google Meet ல் நடைபெற உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொளிக்காட்சி வாயிலாக கலந்துக்கொள்ளும் வண்ணம் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.    

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர்  அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொளிக்காட்சி மூலம்,  முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.

Top