logo
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ்  கல்வி உதவித்தொகை பெற தொழில் கல்வி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தொழில் கல்வி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

27/Jul/2021 03:17:41

புதுக்கோட்டை, ஜூலை:    முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் தொழில் கல்வி மாணவர்கள்  கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  வெளியிட்ட தகவல்:முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் தொழில்கல்வி (B.E, M.B.B.S/etc) பயிலும்  ஏழை மாணவர்களுக்கு படிக்கும் காலத்தில் ஒரு முறை மட்டும் கல்வி உதவித் தொகை ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்,  அரசு முகமையினால் ஒற்றைச் சாளர முறையில் அதிக எண்ணக்கையில் சேர்க்கை நடைபெற்றாலும், இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் மனுக்கள் குறைவாக உள்ளது. எனவே  மேற்கண்ட உதவித்தொகை பெற தகுதி குறித்து பின்வரும் நெறிமுறைகளை   பின்பற்றி விண்ணப்பங்கள் பெறலாம்.

ஒற்றைச் சாளர முறை  வழியாக சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில்  இருப்பிடச் சான்று பெற்றவராகவும், குடும்ப ஆண்டு வருமானம்  ரூ.72,000 க்கு   மிகாமல்  இருத்தல் வேண்டும். மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி  கட்டணச் சலுகை  பெற்றவர்களாகவோ, கல்வி உதவி பெறும் விவசாயிகளின்  மகன்கள், மகள்கள் கல்வி உதவி பெறும்  பணியில் இருக்கு இராணுவ வீரர்களின் மகன்கள், மகள்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் மகன்கள், மகள்களாக இருத்தல்  கூடாது. 

தகுதியுடைய மாணவர்கள், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், குடியிருப்பு சான்று வருமானச்சான்று, பிறப்பிடசான்று, ஒற்றைச் சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்ட்ட ஆணை நகல், குடும்ப உறுப்பினர்கள் வயது, கல்வித்தகுதி மற்றும் வருமானம் ஆகிய விவரங்களுடன் அவரவர் பயின்று வரும் கல்லூரி முதல்வர் மூலம் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

Top