logo
மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரம்

மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரம்

24/Jul/2021 12:12:07

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக முக்கிய தடுப்பு ஆயுதமாக முக கவசம் உள்ளது. எனவே தான் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் வருவாய்த்துறையினர் ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக முக  கவசம் அணியாமல் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. கொரோனா பரவலும் கடந்த 2 நாட்களாக மெதுவாக அதிகரித்து வருகிறது. 

இதையடுத்து மீண்டும் மாநகராட்சி சார்பில் 60 வார்டுகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற பகுதிகளில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.  நேற்று  ஈரோடு மாநகர்  பகுதியில் ஒரே நாளில் மட்டும் 130 பேருக்கு தலா 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் 26 ஆயிரம்  அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top