logo
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: பெறப்பட்ட மனுக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அளிப்பு

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்: பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அளிப்பு

23/Jul/2021 12:28:19


ஈரோடு, ஜூலை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் மூலம்  பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்ட பயனாளிகளுக்கு   நலத்திட்ட உதவிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்  வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  புஞ்சை பாலதொழுவு, புதுப்பாளையம் ஊராட்சி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன்பகுதியில் 80.57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி சாக்கடை வசதி அமைப்பதற்கான பணியினை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

பின்ன,ர் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு   அறுவை சிகிச்சை பிரிவுக்கான படுக்கை வசதியை  திறந்து வைத்தார். மேலும்,  பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா முதியோர் ஆதரவற்றோர் மற்றும் விதவைகளுக்கான உதவித் தொகையினை வழங்கினார்.

 பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை விண்ணப்பமாக அளித்துள்ளனர். குறிப்பாக வீட்டுமனை பட்டா வேண்டி அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உரிய விசாரணைக்குப்பின்னர் தகுதியுளளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் .

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக முதல்வர் உங்கள் தொகுதியில் முதல்வர் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுள்ளார் அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுபோன்று அரசு நிகழ்ச்சிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன இதுபோன்ற நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்

Top