logo
அந்தியூர் பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளி போக்சோவில் கைது

அந்தியூர் பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளி போக்சோவில் கைது

21/Jul/2021 10:56:49

ஈரோடு,  ஜூலை: ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் தேவராஜ். இவரின்  வீட்டின் அருகில் வசித்து வரும் தம்பதியினரின் 4 வயது குழந்தை நேற்று மாலை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தை தனியாக இருப்பதை அறிந்து கொண்ட தேவராஜ் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தையடுத்து சிறுமி கூச்சலிட ஆரம்பித்தார். 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு  சென்று பார்த்தபோது தேவராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  பின்னர் இதுகுறித்து அந்தியூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக மருத்துவமனைக்கு வந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் சம்பவம் குறித்து சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார் . பின்னர் வழக்கு குறித்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை தவிட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த தேவராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் கைது விசாரிக்கின்றனர்.

Top