logo
மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து விலகினார் பில்கேட்ஸ்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து விலகினார் பில்கேட்ஸ்.

14/Mar/2020 06:40:04

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து விலகுவதாக பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்.

 1975-ஆம் ஆண்டு பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில்கேட்ஸ் தொடங்கினார். இவர்,உலக பணக்கார வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இவர், தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார். இந்நிலையில்,  அறக்கட்டளை பணிகளில் கூடுதல் நேரத்தை செலவிடும் வகையிலும் மற்றும் உலக அளவில் சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து விலகுவதாக பில்கேட்ஸ் அறிவித்துள்ளார். மேலும் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவின் தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்ந்து பணியாற்றுவார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Top