logo
கந்தர்வக்கோட்டை பகுதிகளில் சாராயம் காய்ச்சியவர்களை கைது செய்த காவல்துறையினர்

கந்தர்வக்கோட்டை பகுதிகளில் சாராயம் காய்ச்சியவர்களை கைது செய்த காவல்துறையினர்

13/Jun/2021 10:34:41

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காவல் சரகம்  வேலாடிப்பட்டி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை போலீஸார் (13.06.2021) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கந்தர்வகோட்டை காவல் சரகம்  வேலாடிப்பட்டி கிராமத்தில்  சட்டவிரோதமாக 100 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 3 லிட்டர் நாட்டு சாராயத்தை விற்பனைக்காக அவரது இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சி. விக்னேஷ் (26) என்பவரை கந்தர்வகோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர்  சுந்தர மூர்த்தி அவர்களது தலைமையிலான அணியினர் கைது செய்து சாராய ஊறல் மற்றும் நாட்டு சாராயத்தை சம்பவ இடத்தில் அழித்தும் சாரயம் காய்ச்சிய நபரை காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், கந்தர்வகோட்டை தாலுகா வீரடிபட்டி கிராமத்திலும் ராஜ்குமார் என்பவர் போர்வெல்  அருகே சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி  கொண்டிருந்த  . ராஜ்குமார்(40) , ரா.இளவரசன்(33), மா. முருகேசன் ஆகியோர் வைத்திருந்த  5 லிட்டர் நாட்டு சாராயத்தை கைப்பற்றியும் சுமார் 150 லிட்டர் சாராய ஊறலை அழித்தும் 3 பேரையும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Top