logo
சீருடைப்பணியாளர்களுக்கான உடல் தகுதித்தேர்வுகள்: புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தை டிஐஜி ஆய்வு

சீருடைப்பணியாளர்களுக்கான உடல் தகுதித்தேர்வுகள்: புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தை டிஐஜி ஆய்வு

20/Jul/2021 11:38:03

புதுக்கோட்டை, ஜூலை:  சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கின்ற இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் (ஆண் - பெண்) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும்  புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தை  திருச்சி  சரக காவல்துறைத் துணை தலைவர்(19.7.2021) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக காவல்துறையில் 2020-ஆம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 11,741 + 72(BL) இரண்டாம்நிலை காவலர் சிறைகாவல் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு வருகின்ற  ( 26.7.2021) திங்கள் கிழமை  நடைபெற உள்ளது.

இதில், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு மொத்தம் 2613 நபர்களுக்கு (1722-ஆண்கள்- 891-பெண்கள்) நடைபெற உள்ளது. இதில் அடிப்படை உடற்தகுதிகளான பெண்களுக்கு (உயரம், 400 மீட்டர் ஓட்டம்), ஆண்களுக்கு (உயரம். மார்பளவு, 1500 மீட்டர் ஓட்டம்) போன்றவையுடன் கயிறு ஏறுதல், 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், பந்து எறிதல் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளன. 

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தை  திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் ஏ. ராதிகா திங்கள்கிழமை(19.7.2021) பார்வையிட்டார். இதில் ஆயுதப்படை மைதானத்தில் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நிஷா பார்த்திபனிடம்  எடுத்துக்  கூறினார்.


Top