19/Jul/2021 03:12:41
புதுக்கோட்டை, ஜூலை:புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ஓனாங்குடியில் ரூ.17.32 லட்சத்தில் புதிய பள்ளிக்கட்டிடத்துக்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (19.07.2021) அடிக்கல் நாட்டி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஓன்றியம், ஓனாங்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:
தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஓனாங்குடி கிராமத்தில் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதியிலும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்து வசதிகள் இயக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இப்பகுதிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கிடைக்கப்பட்டு செயல்பட்டு வருவதுடன் தேவைப்படும் இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் புதிதாக திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமயம் தொகுதியில் பொதுமக்களுக்கு சீரான மின்வினியோகம் வழங்கும் வகையில் பல்வேறு துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (பொ) அக்பர்அலி, ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.