logo
விசைத்தறி பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை  தொடக்கம்

விசைத்தறி பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை தொடக்கம்

19/Jul/2021 12:21:40

ஈரோடு, ஜூலை: ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ்  செயல்பட்டு வரும் விசைத்தறி சேவை மையத்தில் விசைத்தறி பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை  திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த மையத்தில் விசைத்தறி குறித்து அடிப்படை பயிற்சி அளிப்பதற்கு சாதா விசைத்தறி, டெர்ரி தறி மற்றும் நாடா இல்லாத தறிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜவுளி துறையில் புதிய தொழில் முனைவோர்களையும், திறமை வாய்ந்த தொழிலாளர் களையும் உருவாக்கி ஜவுளித்துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்த சேவை மையத்தில் ஒரு மாத பயிற்சி வகுப்புகள் வரும் 26.7.2021-ஆம் தேதி  தொடங்க உள்ளது.

இதற்கான சேர்க்கை திங்கட்கிழமை   நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2271357, 98945-08433, 99430-33493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  விசைத்தறி சேவை மையத்தின் உதவி இயக்குநர் ராஜா தெரிவித்துள்ளார்.

Top