logo
 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை நகராட்சியாக தரம் உயர்த்த கார்த்தி ப. சிதம்பரம் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை நகராட்சியாக தரம் உயர்த்த கார்த்தி ப. சிதம்பரம் கோரிக்கை

17/Jul/2021 07:29:45

சிவகங்கை, ஜூலை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென மக்களவை உறுப்பினர்  கார்த்தி ப. சிதம்பரம் தமிழக அரசை  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  அனுப்பியுள்ள கடித விவரம்: சிவகங்கை  மக்களவை தொகுதியிலுள்ள  மானாமதுரை பேரூராட்சியானது  சுமார் 30ஆயிரம் மக்கள்தொகை கொண்ட முதல் தரமான பேரூராட்சியாகும்.

இந்த பேரூராட்சி பகுதியில் நமது தமிழ் பாரம்பரிய பயன்படுத்தப்படும்  மண்பாண்டப் பொருட்கள் சிறந்த முறையில் கைவினை கலைஞர்கள் செய்து வருகிறார்கள். மேலும் மதுரை, இராமேஸ்வரம், காரைக்குடி, விருதுநகர், ஆகிய பெருநகரங்களை இணைக்கும் ரயில் சந்திப்பு நிலையமும் உள்ளது.

எனவே வரும் நிதி ஆண்டே நகராட்சியாக மானாமதுரை பேரூராட்சியை தரம் உயர்த்தி உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அதில் கார்த்தி ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 


Top