17/Jul/2021 12:33:00
புதுக்கோட்டை, ஜூலை: உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேட்டு தாட்டுவில் அணைக்கட்டும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து இந்திய ஒன்றிய அரசு, உடன் தலையிட்டு தடுத்து நிறுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத்தலைவர் ஏ. இராமையன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே. சண்முகம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி,தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் கே.பி. பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
விவசாயிகள் சங்கம் எஸ்.பொன்னுசாமி, மாவட்ட பொருளாளர் சி.சுப்பிரமணியன், மாவட்ட துணைச்செயலர் எஸ்.பீமராஜ் மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.சி.ரெங்கசாமி, ச.தோ.அருணோதயன்,என்.தமிழரசன், விவசாய தொழிலாளர்கள் சங்க துணைத்தலைவர் எம். சண்முகம், துணைச்செயலர்கள் கே..தங்கப்பா.
கே.சித்திரவேல் மாவட்டதுணைத்தலைவர்கள் ஏ.எல்.பிச்சை, வி.வீரையா, மாவட்டதுணைச்செயலர் எம்.ஜோஷி உள்பட தமிழ்நாடு விவசாயிகள் சங்க, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று மத்திய பாஜக அரசை கண்டித்தும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.