logo
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்காக மீண்டும் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்காக மீண்டும் தண்ணீர் திறப்பு

03/Oct/2020 04:45:39

ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில், தற்போது நீலகிரி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு  மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2, 421   கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு  நேற்றுவரை 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இன்று பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ,தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக மீண்டும் இன்று முதல் 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதேபோல், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது

Top