logo
புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ 20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ 20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

16/Jul/2021 10:48:43

புதுக்கோட்டை, ஜூலை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ 20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

புதுக்கோட்டை நகராட்சி சந்தையில் வாரந்தோறும் ஆடுகள் மற்றும் மாடுகள் சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் திருச்சி கரூர் தஞ்சாவூர் சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து  ஆடுகளை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.


இந்நிலையில்,  வரும் 21 -ஆம் தேதி வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற  ஆட்டுச் சந்தையில் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடுகளை மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகள் வாங்கி சென்றதில் மொத்தம் ரூ 20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.

வாரந்தோறும் புதுக்கோட்டையில் நடைபெறும் ஆட்டுச் சந்தையில் ஒரு நாள் மொத்த வியாபாரம் சராசரியாக ரூ 5 லட்சத்துக்கு மட்டுமே விற்பனையாகும்.  ஆனால், பக்ரீத் பண்டிகை நெருங்கிவருவதை முன்னிட்டு நடந்த ஆட்டுச் சந்தையில் ஒரேநாளில் ஆடுகள் ரூ. 20 லட்சம் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Top