logo
மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு ஈரோட்டில் அமைதி ஊர்வலம்

மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு ஈரோட்டில் அமைதி ஊர்வலம்

03/Oct/2020 04:42:24

ஈரோடு: இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராமகோபாலன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார்இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில்  ராமகோபாலன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அமைதி ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.

ஈரோடு இந்து முன்னணி சார்பில்ராமகோபாலன் மறைவையொட்டி இன்று(அக்.3)   ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தொடங்கிய அமைதி ஊர்வலத்திற்கு மாநில துணைத்தலைவர் பூசப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தையொட்டி ராமகோபாலன் உருவப்படம் ரதத்தில் அலங்கரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம் ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் சாலை வழியாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் நிறைவடைந்தது. அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராமகோபாலன் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஊர்வலத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர்  வழக்குரைஞர்முரளி, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், எஸ்.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, குணசேகரன், விவேகானந்தன்அதிமுக எம்எல்ஏ- தென்னரசு  உள்ளிட்டோர்.

எஸ்.பி. தங்கதுரை தலைமையில் ஏடிஎஸ்பி பொன்கார்த்திக், டிஎஸ்பி-க்கள் ராஜிவ் உதயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Top