logo
புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு பிரிவிற்கு ஒப்பந்தஅடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் தேர்வு

புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு பிரிவிற்கு ஒப்பந்தஅடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் தேர்வு

15/Jul/2021 12:59:02

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவிற்கு தற்காலிக பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட 100 கிராமங்களில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் தடுப்பு பணிகளை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமானது மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு மூலம் செயல்படுத்தவுள்ளது.

அதனால் இத்திட்டத்தில் தற்காலிக பணியிடங்களான மாவட்ட வள அலுவலர் -1, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுடன் கூடிய கணக்காளர் -1, மண்டல மேற்பார்வையாளர்கள் -2 மற்றும் தொடர்பு பணியாளர்கள் -20 ஆகியோரை திட்ட பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதில் மாவட்ட வள அலுவலர் பணிக்கு சமூகஅறிவியலில் முதுநிலை பட்டம் மற்றும் 3 வருட களப்பணியில் முன்அனுபவமும், கண்காணிப்பு , மதிப்பீட்டாளர் மற்றும் நிதியாளர் பணிக்கு கணினி பயிற்சியுடன் கூடிய இளங்கலை வர்த்தகமும் 1 வருட முன்அனுபவமும், மண்டல மேற்பார்வையாளர் பணிக்கு சமூகஅறிவியலில் இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட களப்பணியில் முன்அனுபவமும்  மற்றும்  தொடர்பு பணியாளர் பணிக்கு 10, 12ம் வகுப்புடன் களப்பணியில் 1 வருட முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஜூலை 27-ஆம் தேதிக்குள் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு,  வளர்ச்சிப்பிரிவு, ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை - 622005 என்ற முகவரிக்கு கல்வி தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். 

Top