14/Jul/2021 10:11:21
ஆலங்குடி, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் தரமற்ற சாலைப் பணியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொத்தமங்கலத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக பனங்குளம் வரை சுமார் 4 கிலோ மீட்டருக்கு தார் சாலை போடும் பணி நடைபெற்றது. சாலைப் பணிகள் நிறையுற்ற நிலையில்,ஆங்காங்கே தாரோடு, ஜல்லிகள் பெயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தார்ச்சாலையை தரமற்றதாக அமைத்த பொறியாளர்கள், ஒப்பந்ததாரரைக் கண்டித்தும், தரமான சாலை அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தியும் கொத்தமங்கலத்தில் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் த.செங்கோடன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை உடனே நிறைவேற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.