logo
கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி அலுவலகம்:அமைச்சர் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தனர்

கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி அலுவலகம்:அமைச்சர் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தனர்

12/Jul/2021 12:53:16

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை  அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையன்று திறந்து வைத்தனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.சின்னத்துரை வெற்றிபெற்றார்.

இதனைத் தொடர்ந்து தினந்தோறும் தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கும், இரவு,பகல் 24 மணி நேரமும் செயல்படும் அலுவலகமாக சட்டமன்றத் தொகுதி அலுவலகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் கனிணி இயக்குனர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புனரமைக்கப்பட்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலகர் பெ.வே.சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.என்.ஆர்.போஸ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் சண்மும், வெங்கடாஜலம், சேட், கந்தர்வகோட்டை ஒன்றியச் செயலாளர்கள் பரமசிவம், தமிழய்யா கறம்பக்குடி ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர் செயலாளர் முருகேசன், திமுக மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், வி.துரைச்சந்திரன் ஒன்றியச் செயலாளர்கள் த.அன்பழகன், வி.ரெத்தினவேல், கே.தங்கவேல், எம்.ஆர்.சுப்பையர், எம்.பாலசுந்தரமூர்த்தி, டி.லட்சாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top