logo
புதுக்கோட்டை சிப்காட்துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதியில்  வரும் செவ்வாய்க்கிழமை மின்தடை

புதுக்கோட்டை சிப்காட்துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை மின்தடை

11/Jul/2021 04:03:47

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்  இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பின்வரும் பகுதிகளில் செவ்வாய்கிழமை(13.07.2021)  காலை  9 மணி முதல் மாலை  5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக,  புதுக்கோட்டை உதவி செயற்பொறியாளர்(இயக்குதலும், காத்தலும், கிராமியம்) எஸ். கண்ணன் வெளியிட்ட தகவல்: 

 சிப்காட் தொழிற்பேட்டை, சிப்காட் நகர், தாவூது மில், முத்துடையான் பட்டி, கிளியூர், மேலூர், அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிபட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்புர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியபட்டி, ராயபட்டி, காயம்பட்டி, மேலகாயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன்நகர், பழனியப்பாநகர், அபிராமிநகர்,.

கோவில்பட்டி, இறைவன் நகர், சமத்துவபுரம், வசந்தபுரிநகர், கவிதாநகர், ஜீவா நகர், ராம் நகர், தைலாநகர், மச்சுவாடி மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் ஆகிய இடங்களில்  காலை 9  மணிமுதல் மாலை  5 மணிவரை மின் வினியோகம் இருக்காது (குறிப்பு; இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது) என்று அவர் தெரிவித்துள்ளார்.


Top