10/Jul/2021 05:36:56
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் (லோக் அதாலத்) மக்கள் நீதிமன்ற விசாரணை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை வகித்தார் நீதிபதிகள் குருமூர்த்தி, சாந்தி ராஜா, அறிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை அறந்தாங்கி கீரனூர் திருமயம் ஆலங்குடி ஆகிய நீதிமன்றங்களில் இருந்து 400 -க்கும் மேற்பட்ட வழக்குகள் விதாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற விசாரணையில், மின் கம்பிகள் அறுந்து விழுந்து இறந்ததில் பால்ராஜ் வேலு ஆகிய இரண்டு நபர்களின் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ 15 லட்சத்து 45 ஆயிரமும் மற்றொரு குடும்பத்தினருக்கு ரூ 16 லட்சத்து 62 ஆயிரத்து 800 ரூபாய் இழப்பீட்டுக்கான காசோலைகளை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் வழங்கினார். நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள் ள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.