09/Jul/2021 09:52:49
புதுக்கோட்டை, ஜூலை: பெட்ரோல், டீசஸ், சமையல் எரிவாயு விலைகளை வரலாறு காணாத வகையில் உயர்த்திய மத்திய பாஜக அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டகாங்கிரஸ் தலைவர் வி. முருகேசன்தலைமை வகித்தார்.நிர்வாகிகள் வழக்குரைஞர் அ.சந்திரசேகரன், மதகம் சுந்தர்ராஜன், ஏ.இப்ராகிம்பாபு, ஆரோக்கியசாமி, மேப்வீரையா, தீன் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
திருமயம் சட்டமன்றத்தொகுதி காரையூர் வட்டாரம்:
தெற்கு மாவட்டத்தலைவர் ராம சுப்புராம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத்தலைவர் அப்பாஸ், முன்னாள் வட்டாரத்தலைவர்கள் வி குமார், பசீர், ஊராட்சிமன்றத் தலைவர் காமராஜ், நிர்வாகிகள் டி. ராமசாமி, வெள்ளையன், பழனியப்பன், மற்றும் மகளிர்காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.